‘‘ரை ட்டருக்கு நோட்டீஸ் போட்டதுல டிபார்ட்மென்டே அதிர்ச்சியில இருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பாடி என்று முடியும் ஏரியாவுல பத்திரத்தை பதிவு செய்ற அலுவலகம் இயங்குது.. இந்த அலுவலகத்துல கடந்த சில மாதங்களாக போலி ஆவணங்கள பயன்படுத்தி பதிவு நடக்குறதாகவும், அதுக்கு அங்க இருக்குற ஒரு ரைட்டர் தான் காரணம்னு புகார் குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி பதிவு செய்றதுக்கு லேட் ஆகுதுன்னு பப்ளிக் தர்ணாவுலயும் ஈடுபட்டிருக்காங்க..
இப்படித்தான் இந்த ஆபிஸ்ல தொடர்ந்து பப்ளிக் பத்திரங்கள் பதிவு செய்ய லேட் ஆகுதுன்னு, மண்டல ஆபிசுக்கு புகார் போயிருக்குது.. அந்த விசாரணையில, பாடி ஏரியாவுல ஒரு பதிவு எழுத்தர் சரியான டாக்குமென்டே இல்லாம, போலி டாக்குமென்ட் பயன்படுத்தி பதிவு செய்ய ட்ரை செஞ்சது தெரியவந்திருக்குது.. இதனால, அந்த ரைட்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்காங்களாம்.. விரைவுல பதிவு ரைட்டருக்கு தடை விதிக்கவும் வாய்ப்பிருக்குதாம்.. இதனால மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பதிவு ரைட்டர்களும், ஊழியருங்களும்னு டிபார்ட்மென்டே அதிர்ச்சியில இருக்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொந்த ஊர்ல பாராட்டு விழா காரணத்தை லேட்டா உணர்ந்தாலும்கூட உஷாராயிட்டாமே சேலத்துக்காரர்’’ என அடுத்த கேள்வியைப் போட்டார் பீட்டர் மாமா. ‘‘பார்லிமென்ட் எலக்க்ஷன் ஜூரம் ஒரு பக்கம் இருந்தாலும், சேலத்துக்காரரின் இமேஜை உயர்த்துவதற்கான ஒர்க்கையும் செஞ்சிக்கிட்டு இருக்காங்களாம் அவரது அடிப்பொடிகள். இப்படித்தான் சமீபத்தில் அவரது சொந்த ஊரில் பார்மர் அசோசியேஷன் என்ற பெயரில் ஒரு பாராட்டு விழா நடந்துச்சாம். ஆனால் இதில் பங்கேற்ற பார்மர்சில் ஒருத்தரை கூட ஸ்டேஜில் ஏற விடலையாம்.
விழாவில் குழுமிய கட்சிக்காரர்கள் சேலத்துக்காரரையும், நிழலானவரையும் புகழ்வதில் மட்டுமே குறியா இருந்தாங்களாம். அதேபோல் விழாவை முன்னின்று ஏற்பாடு செய்தவர் பிரபல கல்வி நிறுவன அதிபராம். இது ஒரு புறமிருக்க இந்த பாராட்டு விழா எதற்காக நடந்ததோ, அது ஒரு பெயிலியர் திட்டமாம். அப்படி இருக்கும் போது எதற்காக இந்த பாராட்டு விழா என்றால் அங்கே தான் இருக்கிறது டுவிஸ்ட். விழாவிற்கு மூலகாரணமாக இருந்த கல்வி நிறுவன அதிபர்தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் இலை கட்சி வேட்பாளராக களமிறங்க பிளான் போட்டிருக்காராம்.
நிழலானவரின் பலத்த சப்போர்ட்டும் அவருக்கு இருக்காம். அவரை புரோமோ பண்ண வேண்டும். எப்படியாவது சீட்டை வாங்கிக் கொடுக்கணும் என்பதற்காகவே சேலத்துக்காரர் பெயரில் நிழலானவர் இந்த விழாவை நடத்தினாராம். இதை கொஞ்சம் லேட்டா உணர்ந்து கிட்ட சேலத்துக்காரரு, விவசாயிகள் குறித்து மட்டுமே பேசிவிட்டு அங்கிருந்து சென்றாராம்…’’ ‘‘மாஜி உளறல் மந்திரியின் மகனால இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே விரக்தியில இருக்காங்களாமே’’
‘‘பூட்டு மாவட்ட இலைக்கட்சி புகழ் மாஜி உளறல் மந்திரியின் மகன், தற்போது மாநகராட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். தம்பி மகன் ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்த 2 பேருக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரில் எவரை ஆதரித்து அவர்களோடு பயணிப்பதென்ற குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த 24ம் தேதி கட்சித்தலைவியின் பிறந்தநாள் விழா தம்பி மகன் தலைமையில் நடந்ததாம்… அப்போது அவருக்கு பெரிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கு..
இதை பொறுத்துக் கொள்ளாத மகனானவர், ‘இங்கே கூட்டம் போடக்கூடாது. வேறு இடத்தில் வைத்தால்தான் வசதி’ எனக்கூறி பொதுக்கூட்ட மேடையையே மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி பெரும் சண்டையே போட்டிருக்கிறாரு.. இப்பிரச்னையில் இருவருக்குமிடையே மோதல் உச்சம் தொட்டிருக்கிறதாம்.. இப்டி ஒவ்வொரு விஷயத்திலும் இருவரும் எதிரும், புதிருமாக மோதிக்கொள்வது சமீபகாலமாக அதிகரித்திருப்பதால், தேர்தல் நேரத்தில் தேவையற்ற பிரச்னையை உருவாக்கும். மாஜி மந்திரியாவது இவர்களை அழைத்து பேசி சரி செய்தால் என்ன என்று இலைக்கட்சி தொண்டர்களே விரக்தியில் பேசி வருகின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.