நேற்று மதியம் வரை அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ஆலப்புழா அருகே உள்ள பழவீடு என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்வம்பரன்(71) என்பவர் அந்த அதிர்ஷ்டசாலி என்பது தெரிய வந்துள்ளது. இவர் சிஆர்பிஎப் முன்னாள் காவலர் ஆவார். ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.