தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என தெரிகிறது. கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?. எம்ஜிஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தம். தமிழ்நாட்டில் பாஜவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை. பிரதமர் மோடி தமிழகம் வருவதால் ஒன்னும் நடக்காது. திருச்சி மாநாட்டில் காலி சேர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜ பூஜ்ஜியம் தான். அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது. மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி. களத்தில் இல்லாத பாஜ என்ற கட்சியை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அதிமுக கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். வராவிட்டால் கவலை இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றார்.