பிரசல்ஸ்: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக பெல்ஜியம் சென்றடைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த வெளிநாட்டுப் பயணம் இந்திய அயலக காங்கிரஸ்(ஐ.ஓ.சி.) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார். அங்கு ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசினார். இன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். தொடர்ந்து 9ம் தேதி, பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார். அங்கு 10ம் தேதி, இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய வம்சாவளி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.