இந்த இரண்டுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆட்டமிருந்தது. ஆட்டத்தில் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தினாலும், கோலடிக்கும் முயற்சியில் பிரான்ஸ் தான் முன்னிலையில் இருந்தது. எனினும் 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறினர். முதல் 90 நிமிடங்களும் கோலின்றி சமனில் முடிய, கூடுதலாக 30 நிமிடங்கள் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் எந்த தரப்பும் கோலடிக்க முடியவில்லை. இப்படி 2 தரப்பிலும் 35 கோல் முயற்சிகள் வீணாகின. அதனால் முழு ஆட்டமும் 0-0 என கோலின்றி டிராவானது.
எனவே பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி, தோல்வி முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் வழங்கிய தலா 5 வாய்ப்புகளில் பிரான்ஸ் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ரெனால்டோ உள்ளிட்ட போர்ச்சுகல் வீரர்கள் கண்ணீருடன் அரங்கில் இருந்து வெளியேறினர். முன்னதாக டுஸ்ஸல்டர்ப்பில் நடந்த ஸ்பெயின்-ஜெர்மனி இடையிலான 3வது காலிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. அதனால் அளிக்கப்பட்ட 30நிமிடங்கள் கூடுதல் ேநரத்தில் மேலும் ஒரு கோலடித்த ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியை நடத்தும் ஜெர்மனி காலிறுதியுடன் விடைபெற்றது. ஜூலை 9ம் தேதி நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் ஸ்பெயின்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.