ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஒழுங்கீனமாக நடந்த கொண்டதற்காக செக் குடியரசின் ஆண்டொனின் பராக்கிற்கு நடுவர் ரெட் கார்டு வழங்கினார். இதனால் 10 வீரர்களுடன் மட்டுமே ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அது செக் குடியரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனிடையே ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் துருக்கியும் 66வது நிமிடத்தில் செக் குடியரசும் தலா ஒரு கோல் அடித்தன. அதன் பிறகு கூடுதல் நேரத்தில் துருக்கியின் சென்க் டோசன் கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி துருக்கி வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்த பின்னர் துருக்கி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செக் குடியரசு வீரர் தாமஸ் சோரிக்கு போட்டி நடுவர் இஸ்த்வான் கோவாக்ஸ் ரெட் கார்டு வழங்கியது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.