அதனால் எப் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த போர்ச்சுகல், துருக்கி, ஜார்ஜியா அணிகள் நாக் அவுட் சுற்றான ‘சுற்று-16’க்கு முன்னேறின. மேலும் ஈ பிரிவில் உள்ள 4 அணிகள் மட்டும் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா என தலா 4 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தன. இருப்பினும் அணிகள் வாங்கிய கோல்கள் அடிப்படையில் உக்ரைனை தவிர மற்ற 3 அணிகளும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறின.
மேலும் சி பிரிவில் இங்கிலாந்து, டென்மார்க், சுலோவேனியா, டி பிரிவில் ஆஸ்திரியா, பிரான்ஸ், நெதர்லாந்து என தலா 3 அணிகளும், ஏ பிரிவில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பி பிரிவில் ஸ்பெயின், இத்தாலி என தலா 2 அணிகளும் அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தன.
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. மொத்தம் 8 ஆட்டங்கள் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6ம் தேதிகளில் நடத்தப்படும். அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 10ம் தேதியும், இறுதி ஆட்டம் ஜூலை 14ம் தேதியும் நடக்கும்.