சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தக்காளி, காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.