சென்னை: சென்னை பல்லாவரம் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் சி.வி.கணேசன் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள், பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? என்று ஆய்வு நடத்தினார். சென்னை பல்லாவரம் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று காலை திடீரென ஆய்வு செய்தார்.
இந்த மருத்துவமனையில் சுமார் 68,000 காப்பாளர்கள் உள்ளனர்.அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த வெளிநோயாளிகளிடம் இங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகிறார்களா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருந்தகத்தில் போதுமான அளவில் மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் இயக்குனர் மருத்துவர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.