முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘ ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல. மகனுக்கு சீட் கிடைக்காததால் ஈஸ்வரப்பா என் மீது கோபமாக இருக்கிறார். அவருக்கு என்னைப் பற்றி தவறான எண்ணம் தோன்றிவிட்டது. பாஜவை கட்டியெழுப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தவர். அவரை சமாதானப்படுத்துவோம். என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்’ என்றார்.