சென்னை :சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளினை முன்னிட்டு இன்று ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதை ஈடு செய்யும் வகையில் ஈரோட்டில் 12ம் தேதியும், திருப்பூரில் 26ம் தேதியும் சேலத்தில் 19ம் தேதியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நாளாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.