ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இளங்கோ என்பவரின் கடைக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் இருந்து சிசிடிவி ஹார்டு டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற நிலையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.