ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொப்பம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு கூலி தொழிலாளி. கனகராஜ், அவரது பெற்றோர் கருப்பசாமி மற்றும் குழந்தை அம்மாள் மற்றும் அவரது சகோதரர் சவுந்தர் (40) ஆகியோர் நேற்றைய தினம் இரவு கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது. கனகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு அருகே யானையை விரட்ட முற்பட்டபோது கனகராஜை யானை தாக்கியது, பின்னர், அந்த யானை இருளில் ஓடி மறைந்தது. குடும்பத்தினரும் மற்ற கிராம மக்களும் அந்த நபரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை