Tuesday, September 17, 2024
Home » ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!!

by Lavanya
Published: Last Updated on

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொப்பம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு கூலி தொழிலாளி. கனகராஜ், அவரது பெற்றோர் கருப்பசாமி மற்றும் குழந்தை அம்மாள் மற்றும் அவரது சகோதரர் சவுந்தர் (40) ஆகியோர் நேற்றைய தினம் இரவு கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது. கனகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு அருகே யானையை விரட்ட முற்பட்டபோது கனகராஜை யானை தாக்கியது, பின்னர், அந்த யானை இருளில் ஓடி மறைந்தது. குடும்பத்தினரும் மற்ற கிராம மக்களும் அந்த நபரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi