ஈரோடு: சோலாரில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவன பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடினர். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.