ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொங்கார்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானதால் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொங்கார்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம். கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதை வனத்துறை கேமராவில் பதிவான நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.