இந்த நிலையில் விதிகளை மீறும் சில ஆலைகளால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு கடுமையான இன்னல்களை சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக எதிர்ப்பு குரல்கள் எழுப்பியும் பயன் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களே நேரடியாக களம் இறங்கியுள்ளனர். வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுக்களாக இணைந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆலைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலை கழிவுகளை முழுமையாக தடுக்கும் வரை தங்களது கள பணி தொடரும் என்று கூறும் கிராம மக்கள் ஆலைகள் சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.