ஈரோடு: வாகன ஓட்டுநரை தாக்கிய புகாரில் வனவர் தீபக்குமார், வேட்டைத் தடுப்பு காவலர் மூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனங்களை அனுமதிக்க லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் தர மறுத்த வாகன ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்து தாக்கிய புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.