திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரீஹாப் அறக்கட்டளை மற்றும் சன் ஆர்த்தோடிக்ஸ் இணைந்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன் மற்றும் சன் ஆர்த்தோடிக்ஸ் உரிமையாளர் க.ஜெயவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.