பெண்களை மையமாக கொண்ட அரசியலை உருவாக்க நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். யதார்த்தத்தில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் பெண்கள் அனைவரும் அரசியலுக்கு வர சக்தி அபியான் திட்டத்தில் சேர வேண்டுமென நான் கேட்டு கொள்கிறேன். இதன் மூலம் வலுவான கட்டமைப்புகளை, அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமங்கள் முதல் நாடு முழுவதும் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்கலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.