உண்மையான சமத்துவம், நீதியை நிலைநாட்ட அதிகளவு பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க ஓராண்டுக்கு முன் ‘இந்திரா உறுப்பினர் சேர்க்கை’யை தொடங்கினோம். தற்போது இந்த முயற்சி பெண்கள் தலைமைத்துவத்துக்கான சக்தி வாய்ந்த இயக்கமாக மாறி உள்ளது. உண்மையான சமத்துவம், நீதியை நிலைநாட்ட அதிகளவு பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

பெண்களை மையமாக கொண்ட அரசியலை உருவாக்க நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். யதார்த்தத்தில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் பெண்கள் அனைவரும் அரசியலுக்கு வர சக்தி அபியான் திட்டத்தில் சேர வேண்டுமென நான் கேட்டு கொள்கிறேன். இதன் மூலம் வலுவான கட்டமைப்புகளை, அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமங்கள் முதல் நாடு முழுவதும் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்கலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்