சுற்றுச்சூழல் வரைவு சட்டத்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் ஆபத்து: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத்திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒன்றிய அரசு அதிகாரி இடம்பெறுவது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதாகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச்செய்யும், மாநில உரிமைகளைப் பறிக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இத்தகைய சட்ட வரைவுகளை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்