Saturday, June 29, 2024
Home » திருப்பதி மாவட்டத்தில் மெத்தனால், வெல்லப்பாகுகளை சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

திருப்பதி மாவட்டத்தில் மெத்தனால், வெல்லப்பாகுகளை சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

by Lakshmipathi

*போலீசாருக்கு எஸ்பி அதிரடி உத்தரவு

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் மெத்தனால், வெல்லப்பாகுகளை சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பதி மாவட்ட காவல் துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் காவலர் விருந்தினர் மாளிகை அரங்கில் எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டு, மேம்படுத்துவதற்கு அனைவருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பணியில் அலட்சியம் காட்டினாலும், முறைகேடு செய்தாலோ, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தினசரி அடிப்படையில் கள அளவில் அமலாக்கப் பணிகளை அதிகரிக்கவும், அதே நேரத்தில் ஆரம்ப தகவல் அமைப்பை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கஞ்சா, மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கடத்தல் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு ஏற்படுத்தவும், அனைத்து இடங்களிலும் அதை கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டார்.மாநில உள்துறை அமைச்சர் அனிதா வாங்கலபுடி அறிவுறுத்தலின்படி போதையில்லா ஆந்திரா என்ற இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொரு அதிகாரியும் கள அளவில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும்.

கிராம மக்களிடம் பேசுங்கள். அப்போதுதான் உள்ளூர் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். மேலும், முன்கூட்டியே தகவல் பெறப்படும் என்றும், இந்த பொறுப்பு அனைத்து எஸ்எச்ஓக்கள் மீதும் இருப்பதாகவும் அவர் கூறினார். வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு, சரியான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போதுதான் நமது பணி அர்த்தமுள்ளதாகிறது.

மீண்டும் மீண்டும் கஞ்சா வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு பிடிஏசிடி பயன்படுத்தப்பட வேண்டும்.மெத்தனால் மற்றும் வெல்லப்பாகுகளை கொண்டு செல்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவை சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில் எஸ்இபி இன் கூடுதல் எஸ்பி ஸ்ரீ ராஜேந்திரன் மற்றும் மாவட்ட எஸ்இபி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

17 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi