சென்னை : ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்ய 3 நபர் மதிப்பீட்டு குழுவில், ஒவ்வொரு குழுவிலும் ஒரு முதுகலை ஆசிரியரை நியமிக்க தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பி.எட் கல்லூரி மாணவர்களை கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய மூன்றாம் நபர் மதிப்பீடு நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டது.