சென்னை: எண்ணூரில் மழைநீரில் கலந்த கச்சா எண்ணெய், தற்போது கடல் நீரிலும் படர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் கலந்ததால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படகுகளை எடுத்துக்கொண்டு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கலப்பால் மீன்கள் பல இறந்துவிட்டதாகவும் மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.