சென்னை: எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையை காரணம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளித்துள்ளது. சிபிசிஎல் ஆலையில் இருந்து ஏற்பட்ட கசிவே எண்ணெய் படலம் உருவாகக் காரணம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் அளித்துள்ளது. மழைநீருடன் ஆலையின் எண்ணெய் கலந்ததால் கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. எண்ணெய் படலம் குறித்து ஆய்வு அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்தது.