இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளால் அங்கிருந்து புலம் பெயர்ந்து லண்டனில் தஞ்சம் அடைந்த உமா குமரனின் பெற்றோர் 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். குயின்மேரி பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்த உமா குமரன், 2000ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகார துணை இயக்குநராகவும் பணியாற்றி அனுபவங்களைப் பெற்றவர். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய உமா குமரனை மதிமுகவும், தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழ் மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக் கூறி மகிழ்கிறார்கள். இந்த தகவலை மின்னஞ்சல் மூலம் உமா குமரனுக்கு வாழ்த்து செய்தியாக அனுப்பியுள்ளேன்.