இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகல்!

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் விலகினர். அவர்களுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான், சவுரப் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளதாவது; பிப்ரவரி 02, 2024 இல் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர்.

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் ராகுல் வலது குவாட்ரைசெப்ஸ் வலியால் புகார் செய்தார். இருவரின் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

இந்திய அணியில் சர்பராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை ஆடவர் தேர்வுக் குழு சேர்த்துள்ளது. பிப்ரவரி 1, 2024 அன்று அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி பல நாள் ஆட்டத்திற்கான இந்தியா ஏ அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சரண்ஷ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவேஷ் கான் தனது ரஞ்சி டிராபி அணியான மத்தியப் பிரதேசத்துடன் தொடர்ந்து பயணிப்பார், தேவைப்பட்டால் டெஸ்ட் அணியில் சேர்வார்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related posts

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு