இங்கிலாந்து பெண் மர்மச்சாவு

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நெடுங்காவடி கிராமத்தில் ரஷ்யாவை சேர்ந்தவர் இடம் வாங்கி பண்ணை வீடு கட்டி வசித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றதால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 60 வயது பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளனர். அவரை அப்பகுதியினர் மீனாட்சியம்மாள் என அழைத்துள்ளனர். வாரம் ஒருமுறை அவரது வீட்டுக்கு வரும் ஹரி என்பவர் கடந்த 23ம் தேதி சென்றபோது நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது. வீட்டில் மீனாட்சியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் சடங்குகள் செய்து பண்ணை வீட்டிலேயே உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு விஏஓ சாலம்மாளிடம் ஹரி மனு கொடுத்துள்ளார். இறந்த பெண் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் விஏஓ, சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!