சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். தரவரிசை பட்டியலுடன் மாணவர்கள் செல்போன் எண்களை சேர்த்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் தரவரிசை தொடர்பாக தகவல்களை சில விஷமிகள் சுயநலத்துக்காக வெளியிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.