டெல்லி: டெல்லி மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தனக்கு அமலாக்கப்பிரிவு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை பயன்படுத்தி தன்னை கைது செய்ய பாஜக அரசு விரும்புவதாக கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். அமலாக்கப்பிரிவு அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமானதாக இருந்தால் ஒத்துழைக்கத் தயார். பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.