அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை தியாகராயர் நகர், மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.