புதுக்கோட்டை :அமலாக்கத்துறைக்கு காபி விருந்து வைத்து வரவேற்க தயாராக உள்ளதாக அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். அமலாக்கத்துறை எந்த நேரத்தில் வந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளதாகவும் கோடநாடு வழக்கில் தடயவியல் துறை அறிக்கையை பொறுத்துதான் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.