சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 12-ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் தொடங்காததால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.