சண்டிகர்: பஞ்சாபில் உணவு கொள்முதல் மற்றும் போக்குவரத்து துறையில் நடந்த விதிமீறல்களை கண்டு கொள்ளாமல் இருக்க முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பாரத் பூஷன் அஷூ லஞ்சம் பெற்றதாக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பண மோசடி வழக்கு பதிந்தனர். இந்நிலையில், லூதியானா உள்பட அமைச்சருக்கு சொந்தமான 10 இடங்களில், சிஆர்பிஎப் மற்றும் ஒன்றிய துணை ராணுவப்படை உதவியுடன் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.