சென்னை: சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. தியாகராயர் நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் வெண்டர்ஸ் என்ற நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. தேசிய நெடுஞ்சாலையில் பெயின்ட், ஸ்டிக்கர் ஒட்டும் ஒப்பந்ததாரர் நரேஷ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் நிறைவு பெற்றது.