ஆனால், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று சம்மனை நிராகரித்துள்ளார் கெஜ்ரிவால். இதன் தொடர்ச்சியாக அவரது வீட்டின் முன்பு நேற்று டெல்லி காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் மக்களவை தேர்தல் பணிக்காக அவர் நாளை குஜராத்திற்கு செல்ல உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக செல்லும் கெஜ்ரிவால் அங்கு பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும், சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சைதர் வசாவா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.