அமலாக்கத்துறை சம்மன் ஜார்க்கண்ட் முதல்வர் திடீர் டெல்லி பயணம்

ராஞ்சி: அமலாக்கத்துறை சம்மனை தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். அமலாக்க துறையின் விசாரணையில் கலந்து கொள்ள அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நில மோசடி தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது.

இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடையாததால் ஜன.29 அல்லது 31ல் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,ஹேமந்த் சோரன் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க அவர் டெல்லி சென்றதாக தெரிகிறது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்