இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடையாததால் ஜன.29 அல்லது 31ல் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,ஹேமந்த் சோரன் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க அவர் டெல்லி சென்றதாக தெரிகிறது.