சென்னை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிய வேண்டும் என டிஜிபி-யிடம் மதுரை அமலாக்கத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்தது அத்துமீறல், வழக்கு பதிய வேண்டும் என டிஜிபியிடம் ED முறையிட்டுள்ளது.