சென்னை: மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.