டெல்லி: தனது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வரலாம் என்று எக்ஸ் தளத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பதிவில் அவர் கூறியதாவது; நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு 2 பேருக்கு பிடிக்கவில்லை. சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு பிடிக்காததால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையின் வருகைக்காக தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம்: ராகுல் காந்தி பதிவு
previous post