சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை முடிவடையும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் புதிய மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.