இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மனுதாரர் அரசு பொதுச்சொத்தை ஆக்கிரமித்து பரோட்டா கடை நடத்துவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சொத்திற்கு உரிமை கொண்டாட முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்காக மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை மதுரையிலுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிடும் வகையில் செலுத்த வேண்டும். அபராத தொகைகளை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு செலுத்திடும் வகையில் புதிய வங்கி கணக்கு ஒன்றை பதிவாளர் தரப்பில் துவக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.