Wednesday, October 2, 2024
Home » ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

by Karthik Yash

திருத்தணி: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காலி நத்தம் இடத்தை மீட்கக் கோரி கிராமமக்கள் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீச்சலம் காலனியில் காலி நத்தம், பாறை புறம்போக்கு இடத்தை கிராம மக்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு பகுதியை அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருவதாக தெரிகிறது. இதனால், கிராமமக்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்த இட வசதியின்றி அவதிப்பட்டனர்.

எனவே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத் தரக்கோரி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கோட்டாட்சியர் மற்றும் கலெக்டரிடம் புகார் மனு வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது கோட்டாட்சியர் தீபாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க கோரிக்கை விடுத்தனர். வரும் 8ம் தேதி ஆக்கிமிக்கப்பட்டதாக கூறபப்டும் நபருக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் தீபா உறுதி கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

You may also like

Leave a Comment

two + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi