இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம், மதுபானங்கள் விநியோகிக்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களே பணியாளர்களை நியமித்து காலிப் பாட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் காலிப் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடியை வசூலித்து, ரூ.297 கோடியை திரும்ப வழங்கியுள்ளோம். இவைகள் எதனையும் அறியாமல் எதிர்கட்சித் தலைவர் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு என்று கூறியிருப்பது அவரது ஒப்பந்ததாரர்களின் குரலை எதிரொலிப்பதாகும். டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரத்தில் இருந்த காலத்தில் அலட்சியம் செய்து விட்டு, இன்று அரசின் வருவாய் இழப்பு குறித்து கூக்குரல் எழுப்பவது அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.