இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் அருணகிரி, பொறியியல் கல்லூரி முதல்வர் மோகன்ராஜ், திருமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், திருமலை பாலிடெக்னிக் கல்லூரி பணி நியமன அலுவலர் அருண்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவன அலுவலர்கள், வேலை நாடுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது: இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் 15 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 2021ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி வரை 125 சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும், 14 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 15,341 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இதுவரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 63 நபர்கள் அரசுப்பணியில் இணைந்துள்ளனர். மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து வேலை நாடுநர்களுக்கும் வேலை கிடைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.