இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்தில் 2674 சமூக பாதுகாப்பு உதவியாளர் (Social Security Assistant) இடங்களுக்கும், 185 சுருக்கெழுத்தர் (Stenographer) பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
- Social Security Assistant (SSA): மொத்த இடங்கள்: 2674. தமிழ்நாட்டில் 416 இடங்கள் காலியாக உள்ளன. (பொது- 155, ஒபிசி- 174, எஸ்சி-37, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-41). இவற்றில் 17 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 41 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 26.04.23 அன்று 18 முதல் 27க்குள். சம்பளம்: ₹29,200-92,300. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- Stenographer: மொத்த இடங்கள்: 185 இடங்கள். (பொது-74, ஒபிசி-50, எஸ்சி-28, எஸ்டி-14, பொருளாதார பிற்பட்டோர்-19). இவற்றில் 7 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும், 18 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதை 50 நிமிடங்களில் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 26.04.23 அன்று வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.
கட்டணம்: ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும்.
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிமுறைகளின்படியும் தளர்வு அளிக்கப்படும்.
www.epfindia.gov.in (Miscellaneous–Recruitments) and http://recruitment.nta.nic.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.04.2023