இந்நிலையில் 8 வது வார்டு எல்லையம்மன் கோயில் தெருவில் மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் கான்கிரீட் தளத்தில் திடீரென பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் போது இப்பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், பல மாதங்களை கடந்தும் சாலை நடுவே உள்ள பள்ளத்தை இது வரை சரிசெய்யப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலை நடுவே ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.