இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாளான வரும் 11ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் அமைப்பு செயலாளர் நிறைகுளத்தான், புரட்சி தலைவி பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முத்தையா உள்ளிட்ட நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி சிறப்பான முறையில் செய்ய கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த கேட்டுக் கொள்கிறேன்.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்