சமத்துவ சமூகம் உருவாக போராடிய இமானுவேல் சேகரனார் நினைவை போற்றி வணங்குவோம்: அண்ணாமலை டிவிட்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய இமானுவேல் சேகரன் நினைவைப் போற்றி வணங்குகிறோம். அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு

விருது பெற்றோரின் போராட்ட வரலாறு: முதல்வர் புகழுரை

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு