உடனே சம்பவம் குறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து பல்கலைக்கழக மின்னஞ்சலுக்கு வெடி குண்டு மிட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை வைத்து கோட்டூர்புரம் போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணாபல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.